Re: [தமிழமுதம்] குடியரசு தினவிழா ஒத்திகை.........ருத்ரா
அன்பு நண்பர் வினைதீர்த்தான்,
கவிஞர் ருத்ரா "நான்கு வர்ணமாக" என்பதை இரண்டு விதமாக நான் புரிந்து கொண்டேன்.
முதலாவது : பாரதக் கொடியின் இருபுறமும் தெரிபவை நான்கு வர்ணங்கள் : பச்சை, வெள்ளை, சிவப்பு, சக்கரம் நீலம்.
இரண்டாவது : சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இன்னும் நாலடுக்கு வர்ணாச்சிரமச் சமூக முறைகள் தலை விரித்தாடுகின்றன என்னும் பொருள்.
நான் மூன்று ஜாதி அடுக்கு என்று எழுதியதன் காரணம் :
ஏழை, பணக்காரன் இல்லை என்னும் பொதுடைமை ரஷ்யாவிலும் செல்வீக நாடுகள் போல் இறுதியில் செல்வந்தர், ஏழையர், இடைப்பட்டவர் என்று மூன்று வகுப்புகள் புதிதாய் உருவாகி விட்டன.
தமிழ் நாட்டிலும் உயர் வகுப்புத் திராவிடர், கீழ் வகுப்புத் திராவிடர், இடைப்பட்ட திராவிடர் என்று மூன்று வகுப்புகள் தோன்றி விட்டன. மூன்று வகுப்புகளிலும் பொருள் உள்ளவர், இல்லாதவர் இருக்கிறார்.
சி. ஜெயபாரதன்.
+++++++++++++++++++++
///முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
நான்கு வர்ணமாகவே தெரியும்
மூவர்ணக்கொடி இது.////
2010/1/26 karuannam annam <karuannam@gmail.com>
////மூவர்ணக்கொடிமூவர்ணக்கொடி இது.////
==============
முன்னே பார்த்தாலும் பின்னே பார்த்தாலும்
நான்கு வர்ணமாகவே தெரியும்இருப்பது மூன்று நிறம் !!!மேல் சாதிகீழ்ச் சாதிஇடைச் சாதிசி. ஜெயபாரதன்.
திரு
ஜெயபாரதன் ஐயாபொருள்
இருப்பவர்பொருள்
இல்லாதவர்நாம் !
மூன்று
சாதிகள் சரியா?அன்புடன்
சொ
.வினைதீர்த்தான்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment