Friday, January 29, 2010

Re: [தமிழமுதம்] நாம ஏன் இப்படி இருக்கோம்

பாஸ் என்ன முன்ன பின்ன கடைக்கு போனதே கிடையாதா ? இந்த நிலைக்கு காரணம் ப்ளாட்பார்ம் வியாபாரிகளிடம் நேர்மை இல்லாதது தான் காரணம். முகத்தை பார்த்து இவன் இ.வா வா எப்படின்னு பார்த்து ஆளாக்கு தகுந்த மாதிரி விலை சொல்லுவது. நான் எல்லாம் நிறைய தடவை அனுபவிச்சிருக்கேன்.. அவர்களின் நிலைக்கு அவர்களே காரணம்.  இந்த நிலை நீங்க சொல்லும் சூப்பர் மார்க்கெட்டில் இல்லை.

2010/1/30 Charles Antony <charles.christ@gmail.com>
எனக்கு என் அம்மா கூட சந்தைக்கு போகும் போதெல்லாம் சில சமயம் டென்ஷன் ஆகும்... அங்க இருக்கும் சின்னச் சின்னக் கடைகளில் காய்கறி விற்பவர்களிடம் பேரம் பேசுவார்கள். இன்னிக்கு காலையில சந்தைக்கு போயிட்டு இறால் வாங்கிட்டு அப்படியே காய்கறி வாங்கும் போது பயிறு வித்தாங்க... அது என்ன பயிறுன்னு தெரியல கட்டு 8 ரூபா சொன்னாங்க அந்த வயதான பாட்டி, என்னோட அம்மா 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு கேட்டதும், அந்தப் பாட்டி போம்மா முடியாதுன்னு சொல்லிட்டாங்க, எனக்கு என் அம்மா மேல் ரொம்ப கோபம் வந்துடுச்சு. நான் அந்தப்பாட்டிக்கிட்ட 8 ரூபாய் கொடுத்ததும் அம்மா என்னடா நீ ன்னு என்கிட்ட கோபப்பட்டாங்க. அப்போ சொன்னேன் AC போட்டிருக்கும் சூப்பர் மார்க்கெட் போனா அவன் என்ன விலை சொன்னாலும் கேக்காம வாங்கிட்டு வரீங்க, ஒரு பெரிய கடைக்கு துணி எடுக்க போனா, அங்க எவ்வளவு சொல்றானோ அந்த விலை கொடுத்துட்டு வரீங்க ஆனா ரோடோரத்துல் ஒருத்தன் கடை போட்டிருந்தா அந்தப் பொருள் எவ்வளவு தரமா இருந்தாலும், பேரம் பேசி, விலை குறைக்காம வாங்குறது இல்லை, ஏன்னு கேட்டேன்? அந்த வயதான பாட்டி வந்து விக்கிறாங்க, அவுங்க சொல்ற விலைக்கு பொருள் வாங்கினா என்னன்னு கேட்டுட்டு வந்துட்டேன்...

நான் சிந்திக்கிறது சரியா தப்பான்னு தெரியல. But this is wat i felt.

--
நட்புடன்
ரமேஷ்  
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment