Saturday, January 2, 2010

[தமிழமுதம்] கீதாஞ்சலி (29) - புதுப்பித்திடு காலை ஒளியை

கீதாஞ்சலி (29)
புதுப்பித்திடு காலை ஒளியை !
 
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



களைத்து மயங்கும் இரவில்
சளைத்து,
உன்னை நம்பி
பொறுப்பை எல்லோம் உன்மேல்
போட்டு விட்டு,
நித்திரையில் என்னைத் தள்ளி
புரண்டு போரா டாமல்
பொத்தெனச்
சாய வேண்டும் நான் !
 

பட்டொளி வீசிப் பறக்கும்
எந்தன்
ஆன்மீக உணர்ச்சியை
தூண்டி விட்டு
புகுத்தக் கூடாது,
தகுந்த பயிற்சி முறை யின்றி
உன்னைத் தொழுதிடத்
துவங்கும் போது !


தேயும் இன்றைய நாள்
சாயும் வேளையில்
கண்களைக்
கிரங்க வைத்து
இரவின் முகத் திரையை
இழுத்து
மூடுவோன் நீ
ஒருவனே !
 

புதிய மகிழ்ச்சி பூத்துப்
புலரும்
காலைப் பொழுதில்,
விழிக்கும் கண்களுக்கு
ஒளியை ஊட்டிப்
புதுப்பித்து
அடுத்த நாளை
மீண்டும்
உதிக்க வைப்பவன் நீ
ஒருவனே !


**********

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment