Thursday, December 31, 2009

[அன்புடன்] Re: நூலின் பெயர் : ஐக்கூ அருவிகள்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் பெயர் : அருநெல்லிக்காய் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : திருமதி விஜயலெட்சுமி மாசிலாமணி
நூலின் அட்டைப்படமே மிகவும் வித்தியாசமாக உள்ளது.மூன்று தலைமுறை
முதுபெறும் எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் அவர்களின் அற்புதமான
அணிந்துரையுடன் வந்துள்ள சிறுகதை தொகுப்பு நூல்.11 சிறுகதைகளின்
தொகுப்பு. சிறுகதை எப்படி ? எழுத வேண்டும் என்று வகுப்பு எடுப்பது போன்ற
சிறுகதைகள். பாரதி கண்;ட புதுமைப் பெண்ணாக இலக்கியத் துறையிலும்
சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் ஆசிரியர்
திருமதி. விஜயலெட்சுமி மாசிலாமணி கதைகளை எழுதி உள்ளார்.

அருநெல்லிக்காய் சுவைப்பது சுகம், அதன் பின் தண்ணீர் அருந்தினால்
தித்திப்பு. அதுபோல, இந்த அருநெல்லிக்காய் நூல் சிறுகதை படிப்பது சுகம்,
படித்து முடித்த பின் கதைகளை அசை போட்டு பார்ப்பது தித்திப்பு. ஊடகங்கள்
எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த விட்டக் காலத்திலும் நல்ல நூலைப் படிப்பது
சுகம். இதனை நூலை வாசிக்கும் நல்ல பழக்கம் உள்ள அனைவரும் உணர்வார்கள்.
அருநெல்லிக்காய் அளவில் சிறிதாக இருந்தாலும், சுவைக்க ருசி அதிகம்.
சிறுகதைகளாக இருந்தாலும் சிந்திக்க வைக்கின்றன. கதை நூலின் பெயரே நன்றாக
உள்ளது.

"ஒரு வாழ்க்கை" என்ற முதல் கதையிலேயே முத்திரை பதிக்கின்றார்.
பணத்திற்காக உழைக்க வெளிநாடு செல்பவர்களி;ன் துன்பங்கள், அந்த நாட்டின்
சட்டதிட்டங்கள், ரஹீம் என்ற சாதாரண உழைப்பாளி, வேலைக்கு சென்ற
வெளிநாட்டில் இறந்து விட, அவர் உடல் தாயகம் வருவதில் உள்ள மனப்
போராட்டத்தை, ஏழைக் குடும்பம் பொருளாதார கஷ்டம் இருந்தாலும், கடைசியாக
அவர் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற மனிதாபிமானத்தை, மனித நேயத்தை
நூலாசிரியர் திருமதி.விஜயலட்சுமி மாசிலாமணி நன்கு உணர்த்துகின்றார்.
நெகிழ்ச்சியான சிறுகதைகளின் அணிவகுப்பு.

சிறுகதை படிக்கின்றோம் என்பதையே மறந்து, கதையோடு நம் மனசை பயணிக்க வைத்து
விடுகிறார், இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. எல்லொரும் எளிதில்
புரிந்து கொள்ளும் எளிய நடை. காட்சிகளைச் சொல்லி, பாத்திரங்களை பேச
வைத்து, கதையை நகர்த்தும் நடை பாணி சிறப்பு. பழிக்குப் பழி வாங்கும்
வக்கிர எண்ணங்களை, தொலைக்காட்சித் தொடராக எடுத்து, காசு குவிக்கும்
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மனிதனை நெறிப்படுத்தும், பண்படுத்தும்
இதுபோன்ற சிறுகதைகளை ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளாக தயாரித்து வழங்கினால்
நாடு நலம் பெறும். நூலாசிரியர் இனி வரும் காலங்களில் ஆங்கிலச் சொற்கள்
பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சிதம்பர ரகசியமா? என்ற சிறுகதையில் மகனைப் பார்க்க, அமெரிக்க செல்ல, விசா
கேட்டு விண்ப்பிக்கும் தாயிடம், நீங்கள் திரும்ப வருவீர்கள் என்பதற்கு
என்ன நிச்சியம் என்று கேட்டு விட்டு, விசா தர மறுக்கும் அமெரிக்கனை வசை
பாடும் தாயுள்ளம் இன்று நாட்டில் நடக்கும் அவலத்தைத் தோலுரித்தது. சட்டம்
என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது தான், ஆனால் இதைத் தவறாக புரிந்து
கொண்டு, சட்டம் பேசிய மக்களைத் துன்புறுத்தும் கொடுமைக்கு, எதிராக உரக்க
குரல் கொடுத்துள்ளார் கதையில். கதையின் இறுதியில் உள்ள வசனம் உங்கள்
பார்வைக்கு!

தாய் மனம் பிதற்றியது

ஒரு கணவனைப் பிரி;ந்து வாழ நினைக்காத தமிழ்ப் பெண்ணின் உணர்வும், பெற்ற
மகனைப் பல காலம் பிரிய மனமில்லாத தாய்ப்பாசமும், இந்தியப் பண்பாடும்,
காலச்சாரமும் இந்த அமெரிக்கனுக்கு எங்கே புரியப் போகிறது ? போங்கடா
நீங்களும் உங்க ரூல்ஸ்ஸீம், ஒரு பெண்ணாக பிறவி எடுங்கடா ! அதுவும் ஒரு
இந்தியத் தாயாகப் பிறவி எடுங்கடா ! அப்போது தான் உங்களுக்கு பெண்ணின்
பெருமைன்னா என்ன? தாய்ப்பாசம்னா என்னன்னு புரியும்." என தாய் மனம்
புலம்பியது.

மனிதாபிமானமற்ற மனிதர்களைக் கதையில் நன்கு சாடுகின்றார். இயந்திரமயமான
உலகில் மனிதனும் இயந்திரமாகி விடுகின்றான். மனிதநேயம் மறைந்து
வருகின்றது. தமிழ்ப்பண்பாட்டை, தாய்ப்பாசத்தைப் புரிந்து கொள்ளாமல், விசா
தர மறுக்கும் அமெரிக்கனின் கன்னத்தில் அறையும் வண்ணம் கதை வகுத்துள்ளார்.
பானை சோற்றுக்கு பதச் சோறாக இரு கதை பற்றி மட்டும் எழுதி உள்ளேன்.
நூலாசிரியர் ஏற்கனவே பல கதைகள் எழுதிய நல்ல அனுபவம் இருப்பதாலும், தான்
பார்த்து உணர்ந்த நண்பர்களின் மூலம் அறிந்த விஷயங்களை கதையின் கருவாக
வைத்துக் கொண்டு முத்தாய்ப்பாக முடிக்கின்றார்.

நூலாசிhயர் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில், அரசு அலுவலராகப்
பணிபுரிந்துள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்த
அனுபவங்களையே கதையாக்கி இருக்கிறார். கதையில் கற்பனையே விட உண்மை கொஞ்சம்
கூடுதலாகச் சேர்த்து இருப்பதால், கதை படிக்கும் வாசகர்களின் மனதில்
நிற்கின்றது.

சவுதியில் தற்போது வாழ்ந்தாலும், தமிழ் மண்ணின் மனம் மாறாமல், நல்ல பல
படைப்புகளை வழங்கி வருகிறார். புலம் பெயர்ந்த தமிழர்கள் என்றால்
பெரும்பாலும் ஈழத் தமிழர்-களையே குறிக்கும். வலி மிகுந்த புலம் பெயர்ந்த
வாழ்விலும், தமிழை மறக்காமல் இலக்கியத் தொண்டு செய்து வருகின்றனர் என்பது
உலகு அறிந்த உண்மை. அந்த வரிசையில் நூலாசிரியர் திருமதி.விஜயலெட்சுமி
மாசிலாமணி, சென்னையில் இருந்து சவுதிக்கு புலம் பெயர்ந்த தமிழராக, மண்
மனம் மாறாமல் படைத்து வருகின்றார். பாராட்டுக்கள். அடுத்த பதிப்பில்
கதைகளுக்கான ஓவியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
www.kavimalar.com

On 12/31/09, eraeravik <eraeravik@gmail.com> wrote:
> நூலின் பெயர் : ஐக்கூ அருவிகள்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
>
>
> நூல் ஆசிரியர் : கவிஞர் அமுதபாரதி
> ஐக்கூ அருவிகள் நூலின் பெயருக்கேற்றபடி ஹைக்கூ கவிதைகளின் அருவியாக நூல்
> உள்ளது. குற்றால அருவியில் குளித்து முடித்த இன்பம் கிடைக்கின்றது. 100
> ஹைக்கூ கவிதைகள் உள்ளது. 100-ம் 100- சிந்தனை விதைக்கின்றது.தமிழக அரசின்
> பரிசு பெற்ற நூல்.
>
> கவிஞர் அமுதபாரதி ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி. இன்றைக்கு பரவலாக ஹைக்கூ
> எல்லோராலும் விரும்பப்படுகின்றது. பலரால் எழுதப்படுகின்றது. 1998-ஆம்
> ஆண்டிலேயே ஹைக்கூ முதற்பதிப்பு வெளியிட்ட கவிஞர். படித்த பொறியாளர் முதல்
> சாதாரண தொழிலாளி வரை பலரும் ஹைக்கூ எழுதி வருகின்றனர். கவிஞர்
> அழுதபாரதியின் ஹைக்கூ கவிதைகள் பல இலக்கிய மேடைகளில் மேற்கோள்
> காட்டப்பட்டவை. இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்த ஹைக்கூக்கள்.
>
> நர்மதா பதிப்பகத்தின் தரமான பதிப்பாக நூல் வந்துள்ளது. ஐக்கூ அருவிகள்
> என்ற இந்த நூலை நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். நல்ல சிந்தனை விதைக்கும்
> நயம் மிக்க ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல். முனைவர். மா. செல்வராசன்
> அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கின்றது.
> அணிந்துரையில் கவிதை வடிவிலும் உள்ளது கூடுதல் சிறப்பு.
>
> மனிதன் பக்கத்து வீட்டாருடன் அன்பாக இருப்பதில்லை, பழகுவதில்லை.
> ஒதுங்கியே வாழ்கிறான் என்பதை உணர்த்தும் ஹைக்கூ.
>
> ஒரே தெரு
> தனித்தனி தீவுகளாய்
> நடக்கும் மனிதர்கள்
>
> செல்வந்தர் வீடுகளில் தொட்டிக்குள் மீனை சிறைப்படுத்தி மகிழ்வார்கள்,
> இதனைப் பார்த்தால் மனதிற்கு இதமாகுமாம். ஆனால் சுதந்திரமாய் இருந்த
> மீனுக்கு மகிழ்ச்சி இல்லை.சிறை பிடிக்கப்பட்டதற்காக மீன்கள் வருந்தி
> சோகப்படுவதில்லை. வாழ்வை இழப்பதில்லை.
>
> தொட்டிக்குள்
> வாழ்ந்தாலும்
> நீந்தும் மீன்
>
> மயக்கம் அடைந்தவர்கள் முகத்தில் நீர் தெளித்து விழிக்க வைப்போம், இது
> நடைமுறை. ஆனால் கவிஞர் நீர் தெளித்ததும் இறந்ததாம், அது என்ன?
>
> நீர் தெளித்தேன்
> துடிதுடித்து இறக்கும்
> தீக்கங்கு
>
> நம் கண்முன்னே தீக்கங்கு, அதன் மீது நீர் தெளித்ததும் வரும் புகை இவற்றை
> காட்சிப்படுத்தி விடுகிறார். இது தான் படைப்பாளியின் வெற்றி. ஹைக்கூவின்
> வெற்றி.
>
> ஜப்பானிய ஹைக்கூவில் பெரும்பாலும் இயற்கையையே பாடுவார்கள். அதற்கு
> சளைத்தவன் அல்ல தமிழன் என்று நிரூபிக்கும் ஹைக்கூ.
>
> எச்சல் படுத்த வேண்டாம்
> அங்கேயே அசைந்தாடட்டும்
> வாழை இழை
>
> வாழை இலையே சாப்பிட வெட்டுகிறான். வீட்டில் விசேஷம் என்றால் வாழையையே வெட்டுகிறான்.
>
> மழை சூடாக இருக்குமா ? என்ற கேள்வியை எழுப்பி, எப்போது சூடாக இருக்கும்
> என்று விடையைச் சொல்லி காட்சிப்படுத்துகிறார் கவிஞர் அமுதபாரதி.
> பேருந்து நிறுத்தம்
> சூடாய் மழை
> பக்கத்தில் அவள்
>
> காதலுக்கு விழிகள் போதும், பேசும் இதழ்கள் வேண்டாம், பேசாமலே காதலிக்க
> முடியும் கண்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு என உணர்த்தும் ஹைக்கூ.
>
> பேசுவதில்லை
> அன்றாடம் காதலிக்கும்
> வண்ணத்துப் பூச்சிகள்
>
> கவிஞர்கள் இரவு விழித்து இருந்தாலும், கவலை இல்லை, கவிதை படைத்து
> விடுவார்கள். விழிகளின் இரவு விழிப்பு, கவிதைகளின் மலர்ச்சியாக அமையும்.
>
> இரவு விழிப்பு
> வீணாகவில்லை
> மூளைக்குள் ஐக்கூ
>
> படைப்பாளிக்கு மரணம் இல்லை, படைப்புகள் நிலைக்க படைப்பாளியின்
> நிலைப்பான். பூத உடல் அழியலாம். புகழ் உடல் அழிவதில்லை.அது போல
> படைப்பாளியின் ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் படைப்புக்கும் உலகின் முதன்
> மொழியான தமிழக்கும் உண்டு. இலக்கிய ஈடுபாடு என்பது கவலைகளை மறக்க வைத்து
> புத்துணர்வு ஊட்டும்.
>
> கவிதைகள் எழுத எழுத
> என்னை ஒதுக்கிச் செல்லும்
> மரணம்.
>
> கவிஞர் அமுதபாரதியின் பெயரில் மகாகவி பாரதியின் பெயரும் இருப்பதால்
> அழகாகப் புனைந்து உள்ளார்.
>
> ஒலி பெருக்கி கிடைத்து விட்டது என்பதற்காக கேட்பவரின் மனநிலை அறியாது,
> பேசியதையே பேசி, கேட்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவார்கள். கூறியது
> கூறல் குற்றம் மேடைப் பேச்சில், ஆனால் கவிஞர் குற்றமில்லை என்கிறார்
> யாருக்கு ?
>
> கூறியது கூறல்
> குற்றமல்ல
> கூவுக குயிலே !
>
> மூன்றாவது வரியில் ஒரு முத்தாய்ப்பு. எள்ளல் சுவையும் உள்ளது. குயிலின்
> கூவல் திகட்டுவது இல்லை, இனிமையாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றார்.
> குயிலுக்கு கவிஞர் சொன்னதை பேச்சாளர் தனக்கு சொன்னதாக எடுத்துக் கொள்ளக்
> கூடாது என்பதை மிகவும் முக்கியம்.
>
> முடி வெட்டும் கடைக்குச் சென்றால், வெட்டிக் கொண்டிருக்கும் போது
> வெட்டுபவர் நமக்கு ஆர்வமில்லாத, தொடர்பில்லா பல கருத்துக்களைச் சொன்ன
> போதும், வேறு வழியின்றி கேட்டுக் கொண்டிருப்போம். இந்த அனுபவம்
> பலருக்கும் உண்டு. அதனை விளக்கும் அழகிய ஹைக்கூ இதோ!
>
> முடி வெட்டும் கடை
> கத்தரிக்க முடியவில்லை
> வெட்டுபவரின் பேச்சு
>
> மீன் பிடிக்கும் போது தூண்டிலில் புழுவை வைப்பது வழக்கம். புழுவைத் தின்ன
> வந்த மீன் தூண்டிலில் மாட்டும். ஆனால் புழுவின் வலி மீன்கள் உணருவதில்லை.
> மீன்கள் மட்டுமல்ல பல மனிதர்களும், சக மனிதனின் வலியை உணருவதில்லை.
> ஈழத்தமிழர் வலியை நாம் உணரவில்லை.
>
> தூண்டிலில் சிக்கும்
> மீனுக்குத் தெரியுமா ?
> புழுவின் வலி.
>
> ஹைக்கூ எப்படி எழுத வேண்டும் என்பதை கற்பிக்கும் நூல். வளரும் கவிஞர்கள்
> அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல்.
>

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment