Monday, December 28, 2009

Re: [அன்புடன்] சித்தரின் சித்தத்திலே

நல்ல முயற்சி சக்தி

2009/12/28 Sakthi sakthithasan <sakthisakthithasan@googlemail.com>:
> சித்தரின் சித்தத்திலே
>
> சித்தர்களின் பாடல்கள் சிந்தையை வறுத்தெடுப்பவை. வாழ்க்கையின் அர்த்தத்தை
> அறிய வைப்பவை. அதனுள் இருக்கும் கருத்துக்களைக் குதறிப் பார்க்கும் போது
> வெங்காயம் ஞாபகத்திற்கு வரும். ஆமாம் உரித்துக் கொண்டே போனால் ஒன்றும்
> இல்லாததுதான் வெங்காயம். எமது மனதின் தோலை உரித்துக் கொண்டே போனால் அங்கே
> உண்மை வெளிப்படும்.
>
> எனது இலக்கியத் திடலில் கொஞ்சம் சித்தர்கள் பாடல்களோடு ஒரு சிறிய
> விளையாட்டு.
>
> பாம்பாட்டிச் சித்தர் கூடு விட்டு கூடு பாய்ந்து அரசர் உடலில்
> நுழைகிறார். அவரின் பாடல்கள் ராணிக்கு வியப்பை உண்டு பண்ணுகிறது. உலக
> உல்லாசங்களில் திளைத்திருந்த தனது கணவரா இப்படிப் பாடுகிறார் என்று
> திகைத்து விடுகிறார்.
>
> பெரியதோர் மாடம், வண்ண மணி மண்டபம்
> இத்தனையும் கொண்டவர்கள்
> விணை முட்டும் மதில் கட்டி அதனுள்ளே
> மறைந்திருக்கும் மகத்தான அரண்மணைகள்
> இன்னும் எத்தனை, எத்த்னை உள்ளனவோ
> அத்தனையும் அவர்களுடன் கூட வந்திடுமோ
> இத்தகைய உண்மைதனை
> உள்ளத்திலே கொண்டவர்கள் எப்படி
> இவ்வுலக செல்வங்களில் நாட்டம் கொள்வார் ?
> என்று பாடிப் பாடி நீ
> ஆடு பாம்பே . . .
>
> **** சக்தி சக்திதாசன் *****
>
> இதோ இதைப் பாம்பாட்டிச் சித்தர் எவ்வாறு கூறுகிறார் ?
>
> "மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
> மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
> கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
> குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே"
>
> மீண்டும் மற்றொரு பாடலுடன்
> சக்தி
>
> --
> அன்புடன் - உலகின் முதல்
>       யுனித்தமிழ்க் குழுமம்
>  buhari.googlepages.com/anbudan.html

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment