Sunday, January 24, 2010

[அன்புடன்] இயக்குனர் இமயம் பாலா அவர்களே

இயக்குனர் இமயம் பாலா அவர்களே
===================================

மனிதனுக்குள் இருந்த‌
ர‌த்த‌ ச‌தையிலிருந்து
வெட்டிய உங்கள் க‌தையில்
சொட்டிய‌து ர‌த்த‌ம் அல்ல‌.
கொட்டிய‌து ச‌த்த‌ம்.
க‌ட‌வுளின் ச‌த்த‌ம்.
ம‌னித‌னை முழுமையாக்க‌
த‌ன்னை ஊனமாய்
விஸ்வ‌ரூப‌ம் காட்டிய‌தை
நீங்கள் காட்டினீர்க‌ள்.
இத‌ற்கு
அந்த‌ "பிறை சூடிய‌ பித்த‌ன்"
த‌ன் ச‌டையிலிருந்த‌
பிறையையே
"விருது" ஆக‌
கொடுத்துவிட்டான்.
அத‌னால் உங்க‌ள் அடுத்த‌ ப‌ட‌ம்
வ‌ரும் வ‌ரை
நிலாக்க‌ளின் உலாக்க‌ள்
இங்கு இல்லை.
இருளில் நாங்கள் தவிப்பதா?
உங்க‌ள் ப‌டைப்புக்காமிரா
சூரிய‌னை நோக்கிப்பார்க்க‌ட்டும்.
அந்த‌ "கிர‌க‌ண‌த்தில்"
ம‌த‌ம் எனும் இருளை
ம‌ன‌ வெளிச்ச‌ம் வ‌ந்து
அழித்துத்துடைக்க‌ட்டும்.
வாழ்க‌!உங்க‌ள் திரைக்க‌லை!

இப்ப‌டிக்கு
அன்புட‌ன் க‌விஞ‌ர் ருத்ரா
< epsivan@gmail.com >


--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment