[அன்புடன்] Re: நூலின் பெயர் :infosys நாராயணமூர்த்தி, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் : கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி |
நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி அட்டைப்பட ஓவியம் மிக நன்று. நடவு வெளியீடாக வந்துள்ள இந்நூல் வடிவமைப்பு மின்னல் கலைக்கூடம். நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலேயே நிலா இருப்பதால், நிலாவைப் போல அழகான கவிதைகளை வடித்து உள்ளார். நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதுபோல் இந்நூல் கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை. நமக்குள் மலரும் நினைவுகளை தோற்றுவிக்கின்றது. புதுக்கவிதை என்ற பெயரில்,நவீனம் என்ற பெயரில்,புரியாத புதிராக கவிதை எழுதி வருகின்றது ஒரு கூட்டம். அவர்களது கவிதைக்கு கோனார் உரை ஒன்று வெளியிட்டாலே வாசகருக்கு புரியும். ஆனால் இந்நூல் கவிதைகள்,வாசகருக்கு எளிதாக புரிகின்றது. கவிஞர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களை,உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். நூலின் பெயர் "கழிந்த நிமிடங்களின் மௌனங்கள்" என்று இருந்திருந்தால் இன்னும் இனிமையாகின்றது. இந்த நூலைப் படித்திட கழிந்த நிமிடங்கள் பயனள்ளவையாகின்றது. அது தான் நூலின் வெற்றி. திரு.கே.எம்.நாச்சிமுத்து அவர்களின் அணிந்துரை நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. புலவர் த.மா.பொன்னுசாமி அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி,தன்னுரையில் குறிப்பிட்டது போல. இயந்திரத் தனமான வாழ்க்கை சூழலிலிருந்து சற்றே விலகி. இளைப்பாறும் இடம்,இலக்கியம்,கவிதை, எழுத்து, இது தற்கால நிகழ்வு. இந்நூலை படிக்கும் போது கிடைக்கும் இதமே. இலக்கியத்தின் மேன்மையை உணர்த்தும். கவிதை எழுத வேண்டுமென்ற முடிவுடன், தனக்குத் தெரிந்த மொழிப் புலமையெல்லாம் பயன்படுத்தி, ஒப்பனைகள் செய்து எழுதவில்லை இவர். தனக்குத் தெரிந்த எளிமையான சொற்களால் மிக எளிமையாக பதிவு செய்துள்ளார். அது தான் நூலின் சிறப்பு. கவிதைகளுக்கு தலைப்பு எதுவும் தராதது வித்தியாசமாக உள்ளது. ரசிக்கும்படி உள்ளது. காதலியின் மௌனம் நமது மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கும் என்பதை உணர்த்தும் கவிதை வரிகள் இதோ! மௌனத்தின் விளைவு மௌனங்கள் பூகம்பத்தின் பேரழிவைக் காட்டிலும் கோரமானது உலகையே ரணப்படுத்தி சந்ததிகளை சிதைக்கும் அணுகுண்டை விட அபாயகரமானது பெரும் விபத்தின் இழப்பை விட வலியானது. கவிஞர் தன் வாழ்வில் நடந்த குழந்தைப் பருவத்து நினைவுகளை எல்லாம் கவிதையாக்கி இருக்கிறார். சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை. நகரத்து வாழ்வில் இயந்திரமாகி விட்ட மனிதர்கள் பற்றிய கவிதை இதோ! எதிர் வீட்டு வீடுகளில் வசித்தாலும் சின்னதாய்க் கூட புன்னகைப்பதில்லை மனிதர்கள். உண்மையிலும் உண்மை நம்மல் பலர் எதிர் வீட்டுக்காரர்களுடன் இப்படித்தான் வாழ்கின்றோம். மனித வாழ்க்கை என்பது வரம். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்,அன்பு செலுத்தி பிறரை நேசித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கவிதை உள்ளது.மனிதன், மனிதநேயத்தை மெல்ல மெல்ல மறந்து விடுகிறான் என்பதைச் சுட்டும் கவிதை! இல்லம் தேடி வரும் மனிதர்களை வரவேற்றுப் பேச முடிவதில்லை நேசமாய் பசித்த முகத்தோடு கையேந்தும் கிழவிக்கு காசு போட மனமிரங்க முடிவதில்லை பலசமயம் இயலாமையோடு பேருந்து ஏறும் சிலருக்கு இருக்கையை பகிர்ந்து கொள்ள இடம் தருவதில்லை மனசு சாலை விபத்தில் சிக்கியவருக்கு நின்று உதவிட முடிவதில்லை எப்போதும் குப்பை விஷயங்களை கோபுரமாக்கிக் கொண்டாடுகிறது பொய்மை வாழ்க்கை இக்கவிதையில் கடைசி வரியின் முடிப்பு முத்தாய்ப்பு. தொல்லைக்காட்சியாகி விட்ட,தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே,வந்தாரை வரவேற்று மகிழும் உயர்ந்த தமிழ்ப் பண்பாட்டை தொலைத்து விட்ட அவலத்தை உணர்த்தி மனிதநேயம் விதைக்கிறார்.கவிதைகளில் பேருந்து நடத்துனர் பணி மிகவும் சிரமமான ஒன்று. அதைக் கூட விட்டு வைக்காமல் கவிதையில் பதிவு செய்துள்ளார். அம்மாவை காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்து, வீட்டில் அம்மா சமைத்த உணவு சுவையாக இருக்கும் என்று வாய் அளக்கும் பலரின் கன்னத்தில் அறைவது போன்ற கவிதை உள்ளது. இன்றைய நவீன வாழ்வில் உள்ள முரண்பாடுகளை உணர்வுப் ப+ர்வமாக எளிய சொற்களால் இனிமையாக புதுக்கவிதை வடித்துள்ளார். கவிதைகளுக்கான நவீன ஓவியங்கள் கவிதையின் தரத்தை மேலும் உயர்த்திட துணை நிற்கின்றது. ஓவியர் மதியழகன் சுப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள்! ஏழை வீடுகளில் குழந்தைகள் அடம் பிடித்து மண் உண்டியல் வாங்குவது வழக்கம். ஆனால் குடும்பப் பொருளாதார வறுமை காரணமாக அந்த உண்டியல் நிறையாது. இதனை உணர்த்தும் கவிதை. நிறைய கனவுகளோடு நிறையாத உண்டியலும் நானும் சோளத்தட்டையில் சுருட்டு செய்து, சிறுவயதில் பிடித்ததற்காக அடி வாங்கிய அண்ணன். இன்று தைரியமாக வீட்டிலேயே சிகரெட் பிடிக்கிறார் என்பதை நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி தம்பியாக இருந்து பாடி உள்ளார்.கடைசி வரியில் முத்திரை பதிக்கிறார். இப்பெல்லாம் அண்ணன் வீட்டிலேயே சிகரெட்டு பிடிக்கிறாரு அம்மா திண்ணையோட இருக்கிறதனாலேயே பல இல்லங்களில் பெற்றெடுத்த அம்மாவிற்கு இடம் தருவதில்லை. கருவறையில் இடம் தந்தவளுக்கு வீட்டின் ஒரு அறையில் இடம் தராமல்,முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. இன்னும் சில இல்லங்களில் வீட்டுத் திண்ணையைத் தாண்டி உள்ளே வரக்கூட அனுமதிப்பதில்லை என்ற அவலத்தை கவிதையின் மூலம் சுட்டுகிறார். மனிதநேயத்தை, பாசத்தை விதைக்கும் விதமாக, உள்ளத்து உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்துள்ள கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்திக்குப் பாராட்டுக்கள். பின் அட்டை மின்னல் போல பளிச்,கவிதைகள் நன்று! |
On 1/25/10, RRavi Ravi <eraeravik@gmail.com> wrote:
நூலின் பெயர் :infosys நாராயணமூர்த்தி, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி editor www.kavimalar.com நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன்
1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசியஸ் நிறுவனம் ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கி, இப்போது ரூ10,000 கோடி வருமானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான திரு.நாராயணமூர்த்தியின் வரலாற்றை திரு.என்.சொக்கன் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.இளைய தலைமுறை படித்து உணர வேண்டிய சிறந்த நூல்.
உழைத்து உயர வேண்டும், இலட்சியம் அடைய வேண்டும் என்ற தேடல் வேட்கை உள்ளவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நூல் உள்ளது. திரு.நாராயணமூர்த்தியின் அப்பா ஆசிரியர் என்பதால் அவர் சராசரி தந்தையாக மட்டும் இல்லாமல் ஆசிரியரகாவும்,பலவற்றை புகட்டினார். குழுவாக இசைக்கும் சிம்பொனி பற்றி தந்தை விளக்கியதன் விளைவாக, பின்னர் அந்த விதை, கணிப்பொறி உலகில் ஒரு சிறந்த குழு மனிதராக, குழு வேலை என்ற யுத்திக்கு உதவியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தின் 4 வது இடம் பெற்றதற்காக தந்தை பாராட்டவில்லை. முதல் மூன்று இடங்கள் என்னாச்சு? என்றார்,அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மூன்றவாதாக வந்தார். அப்போதும் அவர் தந்தை பாரட்டவில்லை. மூன்றாவது இடம் தானா? என்று உதட்டை பிதுக்கினர். பிறகு தான் அவருக்கு புரிந்தது,எதிலும் முதல் இடம் அடைய வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம். எனவே எதிலும் முதல்நிலை அடைவதே இலட்சியம் என உழைக்கத் தொடங்கினார். முதல்நிலை அடைந்தார்.
ஆங்கில நூல்கள் வாசிக்கும் பழக்கத்தையும், ஷேக்ஸ்பியரை வாசிக்கவும் தந்தை பழக்கினார். திரு.நாராயணமூர்த்தி வெற்றியில் அவரது பெற்றோர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை இந்நூலின் மூலம் நன்கு உணர முடிகின்றது. தன் மகன் சாதனையாளராக வர வேண்டும் என்றால் பெற்றோர்களும் ஊக்கம் தர வேண்டும் என்பதை உணர்த்துகின்றது நூல்."ஒவ்வொரு பிரச்சனை எதிர்ப்படும் போதும், அதைச் சமாளிப்பதற்காக தனது உழைப்பைப் பல மடங்காகப் பெருக்கிக் கொள்வதன் மூலம் அந்தத்; தடைகளைத் தாண்டி விடலாம் " என்று அவர் உறுதியாக நம்பினார்.
வருங்கால சாதனையாளர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய கல்வெட்டு வார்த்தை நூலில் உள்ளது. மனதில் பதியும் மந்திரச் சொற்கள் போல பல கருத்துக்கள் நூலில் உள்ளது. ஒரு வெற்றியாளரின் உண்மை வரலாற்றைப் படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் நாமும் வெற்றியாளராக வேண்டும் என்ற உத்வேகம் தருகின்றது.
குடும்ப சூழ்நிலை காரணமாக தனது ஐ.ஐ.டி. கனவை விடுத்து மைசூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசிய பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் வகுப்பில் சேர்ந்தார் நாராயண மூர்த்தி. பின்னர் கான்பூரிலிருந்து ஜ.ஜ.டியில் முதுநிலைப் படிப்புக்குச் சேர்ந்தார் என்ற தவல் நூலில் உள்ளது.
இங்கு தான் கணிப்பொறியை முதன்முதலாகப் பார்த்து நம்ப முடியாத ஆச்சிரியத்தோடும், பரபரப்பு கலந்த ஆவலோடும் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கு ஆரம்பக் கல்வியிலேயே கணிப்பொறி அறிமுகம் செய்து வைத்து விட்டார்கள். இன்றைய தலைமுறைக்கு சகல வசதிகளும் மிக எளிதாக கிடைத்து விட்டது.
1969ஆம் ஆண்டு அகமதாபாத் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் கணினித் துறையில் பணிக்கு சேர்ந்தார். அங்கே அவருடைய முதல் சம்பளம் மாதத்துக்கு எண்ணூறு ரூபாய் மட்டுமே. ஆனால் இன்றைக்கு இலட்சக்கணக்கில் ஊதியம் பெறுகின்றனர். இப்படி அவர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு நூலில் உள்ளது. அவருக்கும் சுதாவிற்கும் ஏற்பட்ட காதல், சுதாவின் தந்தையிடம் ஏற்பட்ட முரண்பாடு, தானும் ஆறு நண்பர்களுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்று முனைப்போடு இறங்கினார். இதற்கு அவரது மனைவி சுதா கூட சற்று தயங்கினார். இருந்தபோதும் சுதா அம்மா சொன்ன அறிவுரைப்படி, அலமாரியில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கணவருக்கு தந்து உதவினார். அந்த சிறுதுளி தான் பெருவெள்ளமானது.
" சிறிய சேமிப்பு தான் அவசரத்திற்கு உதவும் " என்ற சுதாவின் அம்மா அறிவுரை நமக்கும் உதவும். சேமிப்பு என்பது மிகவும் அவசியம். அவசர, அவசிய காலங்களில் அது உதவும் என்பதை உணர்த்துகின்றது. அந்த சிறிய சேமிப்பு தான் முதலீடு ஆகி பல கோடிகளாகப் பெருகிட உதவியது.
ஏழு பேர் வெற்றிக் கூட்டணியின் பெயர்கள் 1)நாகவர ராமராவ் நாராயணமூர்த்தி, 2) நந்தன் நீலகனி, 3)கே.தினேஷ், 4)எஸ். கோபாலகிருஷ்ணன், 5)என்.எஸ்.ராகவன், 6)எஸ்.டி.ஷிபுலால், 7)அஷோக் அரோரா.
இவர்கள் அனைவரும் 1980 ஆண்டு இறுதியில் தங்களின் வேலையைத் துறந்தார்கள். 1981ம் ஆண்டு ஜீலை மாதம் புதிய நிறுவனம் தொடங்கி வெற்றிக் கொடி நாட்டினார்கள், இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது.
திரு.நாராயணமூர்த்தி பெற்ற விருதுகளின் பட்டியல், பதவி வகித்த நிறுவனங்களின் பட்டியல், இன்போசியஸ் நிறுவனம் பெற்ற விருதுகளின் பட்டியல், இன்போசியஸ் அறக்கட்டளை பொறுப்பாளர் சுதாமூர்த்தி பெற்ற விருதுகளின் பட்டியல் யாவும் நூலில் உள்ளது. நூலின் கடைசிப்பகுதியில் திரு.நாராயணமூர்த்தி சொன்னவை என்ற தொகுப்பும் உள்ளது.
தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் தான் நல்ல தலைவர்களாக முடியும்
தயாராக இருக்கிறவர்களுக்குத் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும், எதற்காகவும்,
நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை விட்டுத்தரக்கூடாது
தடைகளைக் கூட நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்
திரு.நாரயணமூர்த்தியின் வெற்றியின் ரகசியத்தை பறைசாற்றும் விதமாக மிகச் சிறப்பாக நல்ல நடையில் எழுதிய நூல் ஆசிரியர் திரு.என்.சொக்கன் பாராட்டுக்கு உரியவர், அவரது உழைப்பை உணர முடிகின்றது.
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment