Monday, December 28, 2009

Re: [அன்புடன்] மழைக்காதலன் பக்கங்கள் - பயணங்கள் - 1

அன்பின் சார்ல்ஸ்,
 
அழகான கவிதை. மனது பயணங்களின் போது விரைவாக பறந்திடும் காட்சிகளோடு போய் ஒட்டிக் கொள்ளும் நிகழ்வை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
 
வாழ்த்துக்கள்
 
அன்புடன்
சக்தி

2009/12/28 Charles Antony <charles.christ@gmail.com>

http://charlesantony.blogspot.com/2009/12/blog-post_29.html


பயணங்களில்.....

 

நகரும் மரங்களின்

கிளைகளின் மீதேறி

உயரே பறக்கிறது

 

வயலின் வயிற்றைக்

கிழித்து விரிந்திருக்கும்

ஒற்றை மரத்தில் நிலைகொண்டு

அமர்ந்திருக்கிறது

 

மலைகளின் பிளவுகளில்

இருளைக் கிழிக்கும்

வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

 

சராலென கீழிறங்கும்

பள்ளத்தாக்கின்

மயக்கும் வனப்பில்

லயிக்கிறது

 

என்னோடு மட்டும்

வரமறுக்கிறது

ரயில் பயணத்தில்

மனசு...




--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
சக்தி சக்திதாசன்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment