Re: [அன்புடன்] நண்பனுக்கோர் மடல்
பயணங்கள் முடியாமல்
நண்பனுக்கோர் மடல்
அன்பு நண்பனே !
ஆண்டொன்று ஓடி விட்டது
ஆயிரம் நிகழ்ந்து விட்டது
ஆற்றாமையின் உச்சத்தில்
அல்லாடும் மக்கள் கூட்டம்
கனவுகளைத் தாங்கிக் கொண்டு
நினைவுகளைப் புடம் போட்டு
கடமைவழி சென்றவர்கள்
கண்ணீரின் வெள்ளத்தில்
கடந்து வந்தது கற்தரை
நடந்து கொண்டிருப்பது முட்தரை
வந்திடுமா ? புற்தரை என ஏங்கிக் கொண்டே
விரைந்தோடும் சொந்தங்கள்
அவர்களின் வானத்தில்
தினமும் அமாவாசை
அவர்களின் நாட்களுக்கு ஏன் தானோ
இரவுகள் விடிவதில்லை
சொல்லச் சொல்ல வலிக்குதடா
செல்லச் செல்ல களைக்குதடா
பயணங்கள் முடியாமல்
பாதையும் தெரியாமல்
பரிதவிக்கும் சொந்தங்கள்
பார்ப்பாரோ வசந்தங்கள் ?
அரசியலோர் விளையாட்டாய்
அன்றாடும் சூதாடும்
பாண்டவரும், கெளரவரும்
பாவம் இவர்கள் மானிடர்கள்
கருமையான இரவொன்றில்
கண்களைக் கட்டிவிட்டு
வாசலைத் தேடவிட்டு
வேடிக்கை பார்க்கும் கூட்டம்
உள்ளத்தின் உணர்ச்சிகள் எல்லாம்
வெள்ளமாய் பெருக்கெடுத்து
கண்ணீராய் ஓடுதடா
அதோ! அங்கே தெரியும்
புதியதோர் வருடமாவது
கிடைக்குமா வாழ்வு
களைத்து விட்ட மக்களுக்கு ?
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment