Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)
விளைவுகள்
நீ என்னை பார்த்தாலே என் மனதில்
காதல் தீ பற்றி எரிகிறது.
உன் சிரிப்பில் ஒரு கனப்பு தெரிகிறது
என் நடுக்கம் குறைகிறது.
நீ என்னை கடந்து செல்லும் போது
தென்றல் என்னை வருடிச் செல்கிறது.
மெலிதான உன் வாசனை நுகர்ந்தாலே
மனம் தட்டுகெட்டு அலைகிறது.
நீ பேசும் வார்த்தைகள் காதில் விழுகிறது
அது இசை என்று என் காதல் சொல்கிறது.
உன்னுடன் பேச நினைக்கும்போது மட்டும்
தொண்டை அடைக்கிறது நெஞ்சு கரிக்கிறது.
காதலின் விளைவுகளோ இவை....
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment