Wednesday, February 17, 2010

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

ஏமாற்றம் 

?ui=2&view=att&th=126dcde3fd3ff6e5&attid=0.1&disp=attd&realattid=ii_126dcde3fd3ff6e5&zw

பாலைவனக் கானல் நீரை
சோலைவனக் குளிர் நீரென
நம்பி வந்த நான்தான் ஏமாந்தேன்
அது என்னை ஏமாற்றவில்லை..

வானவில்லின் வர்ணம் குழைத்து
காதல் இதயம் ஒன்று 
வரைய வந்த நான்தான் ஏமாந்தேன்
அது என்னை ஏமாற்றவில்லை.

கானம் பாடும் வானம்பாடியுடன்
காதல் கீதம் இசைத்து
பாட வந்த நான்தான் ஏமாந்தேன்
அது என்னை ஏமாற்றவில்லை.

அது போல தான் பெண்ணே,

உன் எண்ணம் அறியாமல் 
என் மனம் மட்டும் உணர்ந்து
காதலை சொன்ன நான்தான் ஏமாந்தேன்
நீ என்னை ஏமாற்றவில்லை.

ஆனால்

மறந்து விடுவேன் என்று எண்ணாதே
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.

-- 
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment