Thursday, February 18, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

////வேந்தன் அரசு
சின்சின்னாட்டி

(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."   ////

வேந்தரே,
 
மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?      
 
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++
 
2010/2/18 சி. ஜெயபாரதன் jayabarathans@gmail.com
 
////மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்.  ////
 
வேந்தரே,
 
கற்கால மனிதன் எப்படித் தற்கால நாகரீக மனித‌னாக மாறினான் என்பதை விளக்குவீரா ? உலகில் செம்மையாக வாழ்வதற்கு ஒழுக்க நெறிகளை யார்யார் வரையறுத்தார் ?
 
இயற்கையில் நல்லவர் என்று எந்தக் கோலை வைத்து ஒப்பிட்டு அளக்கிறீர் ? 
 
நீவீர் எப்படி ஒழுக்க நெறி மனிதனாய் மாறினீர் என்று சொல்வீரா ? அல்லது பிறக்கும் போதே உங்கள் காதில் கவச குண்டலங்களாய் ஒழுக்க நெறிகள் ஒட்டி இருந்தனவா ?      
 
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++
2010/2/18 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>



17 பிப்ரவரி, 2010 3:36 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:

நண்பரே.

கற்காலம் முதலே மனிதர் ஒழுக்க நெறிகளை வகுக்கத் தொடங்கி உலகில் பற்பல மதங்கள் தோன்றின.  அவற்றின் அடிப்படை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகள், கட்டுப்பாடு.  எல்லா மதத்திலும் உள்ள விதிவிலக்கான 25% மூர்க்கர்தான் உங்கள் கண்ணில் படுகிறார்.  75% மாந்தர் நெறியோடு இருப்பதால்தான் உலகம் ஓரளவு வாழத் தகுதி பெற்றுள்ளது.

உலகில் கற்கால மனிதர் ஓரளவு நாகரீக மாந்தராக வாழ்வதற்குக் காரணம் பைபிள், குர்ரான், திருக்குறள், கீதை போன்ற நீதி நூல்கள் என்பது என் கருத்து. அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன.  ஆயினும் அவை தேவை மக்களுக்கு.  நாம் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.    
 
 
மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை
இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்
 
தேனி மலரை நாடும்
வெறும் ஈ உயிரினங்களின் பின்வாசல் ஈனுவதை நாடும்
 
 
 
   



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment