[தமிழமுதம்] மழைக்காதலன் பக்கங்கள்
குட்டிச் சுவற்றில்
சாய்ந்து கொண்டு நின்றிருந்தேன்
மொட்டை மடி சுற்றுச் சுவரில்
குழந்தைகளோடு குழந்தைகளாய்
நீ....
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
உதடு குவித்து அனுப்பினாய்...
சிறகு முளைத்து
முத்தத்திற்கு
சட்டென்று
குறுக்கே வந்த வண்ணத்துப்பூச்சிகள்
பிடித்துச் சென்றன முத்தத்தை.
எப்படிப் புரிய வைப்பேன் அவைகளிடம்
அந்த முத்தம் எனக்கானது என்று....
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment