[தமிழமுதம்] நன்றி மாதவராஜ், கலைமகள் ஷைலஜா, கலைமகன் பைரூஸ், யாழ்தேவி மற்றும் தினக்குரல்

நண்பர் திரு.மாதவராஜ், திரு.பவா செல்லத்துரை, வம்சி பதிப்பகம் மற்றும் இத் தொகுப்புக்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* தமிழ்ப்பதிவுகளின் பிரபல திரட்டியான யாழ்தேவி புதிய வருடத்தின் ஜனவரி முதல் வார நட்சத்திரப் பதிவராக என்னை அறிவித்திருந்தது. இதனால் ஜனவரி, 2010 புதுவருடமே மகிழ்ச்சிக்குரியதாகவும் ஊக்குவிப்பதாகவும் என்னை விடாமல் இயங்க உற்சாகமளிப்பதாகவும் அமைந்துவிட்டது. அத்தோடு பல புதிய வலைப்பதிவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத்தந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு இதழ் (17.01.2010) என்னைப் பற்றிய குறிப்புக்களோடு எனது கட்டுரையொன்றையும் பிரசுரித்திருந்தது. இலங்கை தமிழ்ப் பத்திரிகையுலக எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரது தனிப்பட்ட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அறிமுகங்களும் இதனால் கிடைத்தது. இக்கணத்தில் 'யாழ்தேவி' திரட்டிக்கும் அதன் உரிமையாள நண்பர்களுக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலைமகன் பைரூஸ் அவரது வலைத்தளத்தில் என்னைப் பற்றி எழுதியிருந்தார். எனது ஒவ்வொரு பதிவுகளின் போதும் தனிப்பட்ட மின்னஞ்சல்களிலும், கருத்துக்களிலும் எனது ஆக்கங்களைப் பற்றி எழுதும் இவரது விமர்சனங்களும், கருத்துக்களும் என்னை மேலும் எழுத ஊக்குவிப்பன. நண்பர் திரு.பைரூஸுக்கு எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு நான் மறக்க முடியாதவர்கள் இன்னுமிருக்கிறார்கள். இலங்கையில் எனக்குக் கிடைக்காத இந்திய வார, மாத இதழ்களை எனக்காக வாங்கிச் சேகரித்து வைத்திருக்கும் எழுத்தாளர் தோழி உமா சக்தி, எழுத்தாளர் நண்பர் பி.ஏ.ஷேக் தாவூத் மற்றும் வெளிவரும் எனது ஆக்கங்களின் பக்கங்களை உடனுக்குடன் (ஸ்கேன் Scan) செய்து அனுப்பிவைக்கும் அன்புச் சகோதரி ராமலக்ஷ்மி. இக் கணத்தில் இவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
உலகின் ஒரு மூலையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இவை அனைத்துமே எனது எழுத்துக்களுக்கான வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, நல்ல விமர்சனக் கருத்துக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. எனது எழுத்துக்களை மேம்படுத்த தொடர்ந்தும் உங்கள் அனைவரதும் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் நிச்சயம் உதவும். அன்பான சக பதிவர்களும், வாசகர்களும் இல்லாவிடில் இன்று நானில்லை.
நன்றி அன்பு நண்பர்களே !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment